30 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை !
Thursday, April 11th, 2024அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த அரிசித் தொகையை இம்மாதம் 21 ஆம் திகதி மற்றும் மே மாதத்தில் வழங்குவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்தாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புத்தாண்டுக்கு முன்னர் விநியோகிக்கக் கூடிய அனைத்து பிரதேசங்களிலும் அரிசி விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
மீண்டும் வாள்வெட்டு: மானிப்பாயில் சம்பவம்!
கச்சதீவு புனித திருவிழாவில் கொரோனா தொடர்பில் கவனம் - இலங்கை கடற்படை!
|
|