29 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம்?
Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுமார் 29 சிறுவர்கள் கொழும்பு சிறுவர் மருத்துவமனையான பொறளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் பல்வேறு மருத்துவமனைகளில் இதுபோன்ற பல சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதலாவது குழந்தை நேற்றையதினம் இனங்காணப்பட்டது. குருநாகல் நாத்தண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தையின் பாட்டனார் அண்மையில் இந்தியா சென்றுவந்ததை அடுத்து அவருக்கு கொரோனா சந்தேக அறிகுறிகள் காணப்பட்டதை அவர் உட்பட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி...
குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் - கொழும்பு பேராயர் கர்தினால் ...
பெரும்போக நெற்பயிர் செய்கை - உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 ப...
|
|
|


