27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!
Monday, June 24th, 2019
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.
ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - காலநிலை அவதான நிலையம்!
தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
|
|
|


