நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் – காலநிலை அவதான நிலையம்!
Friday, March 1st, 2019நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்பிரகாரம் கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் எனவும்,
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
Related posts:
சர்வதேசம் ஒன்றிணைய வேண்டும்! - ஜனாதிபதி
நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும் - வீண் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை - இராஜாங...
பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|