சமஷ்டியைக் கோருவது தமிழர் உரிமை – வழங்குவதா, இல்லையா என முடிவு செய்வது அரசே – வீண் விவாதங்களைத் தவிருங்கள் என பிரதமர் தினேஸ் வலியுறுத்து!

Saturday, July 15th, 2023

“சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு – தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமம் மட்டுமே முடிவு செய்யும். எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” –  என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது. அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் – அரசுமே முடிவு செய்ய முடியும்.

எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.” – என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசு வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: