2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்கப்படும் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Friday, July 28th, 2023

2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இதன்மூலம் வீதிகள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பது அடையாளம் காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இணையவழி தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக பொதுமக்களுக்கு சேவைகளை உத்தியோகபூர்வமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை இணையவழி தொழில்நுட்பத்தின் (ONLINE) ஊடாக செயற்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர, “இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுமக்களுக்கு பாரிய சேவைகளை ஆற்றுகின்றன.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’“ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: