2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் – சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி மார்ச் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!
Monday, February 19th, 20242024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
முன்பதாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16.2.2024) நிறைவடைந்தது.
அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று (19.2.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான பாடசாலை சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
அதன்படி அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது!
வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நாளை...
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது - புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்...
|
|