2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 22nd, 2024

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: