2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!
Friday, March 9th, 2018
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுரபிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் புகையிரத கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில்பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணிகளினால்சம்பவித்துள்ளன.
2017ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
புதிய அரசியலமைப்பு வரைவு ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவு - சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அறிவிப்பு!
|
|
|


