அவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, December 13th, 2019


சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

ஆட்கடத்தலுக்கு எதிராக சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்காக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts:

அந்தமான் அருகே காற்றழுத்தம்: இது புயலாக மாறக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதிப் பணிப்பாளர் யமுன...
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் கொவிட் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்ல...