மடகஸ்கரில் இலங்கை தூதரக அலுவலகத்தை திறக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, December 17th, 2020

மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் திறக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மடகஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் தூதரக பொது அலுவலகம் நிறுவப்படுவது, இரு நாடுகளுக்கும், குறிப்பாக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மடகஸ்கரில் வாழும் வணிக சமூகத்திற்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக்கருத்தில் கொண்டு, மடகஸ்கரில் இலங்கை தூதரக பொது அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்காக வெளியுறவு அமைச்சரின் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

000

Related posts: