உலகின் மிக வயதான ஆமை மரணம்!

Sunday, October 6th, 2019


அரச குடும்பமொன்றுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வயதானது என்னும் அர்த்தம் கொண்ட ‘அலக்பா’ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தில் ஓக்போமோசோ அரண்மனையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உண்ணுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த பெண் ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு தனிப்பட்ட வேலையாட்கள் இருந்துள்ளனர்.

இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்நாட்டின் தொலைத்தூர பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.

1770 முதல் 1797 வரை ஆட்சி செய்த இராஜ்ஜியத்தின் மூன்றாவது தலைவரான இசான் ஒகுமாய்டே என்பவரால் இந்த ஊர்வன அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

ஒகுமாய்டேவின் காலத்தில் அரண்மனைக்கு கொண்டுவரப்படும் போதே அலக்பாவுக்கு 100 வயதிற்கு மேல் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.இருப்பினும், இந்த ஆமையின் வயது விவகாரத்தில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையின் ஊர்வனவற்றின் கண்காணிப்பாளரான டிம் ஸ்கெல்டன், அலக்பா இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருப்பது சாத்தியமற்றது என்றார்.

Related posts:

‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந...
போர் விமானங்கள் குண்டு மழை - காசா நகர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்!
கால்நடை வளர்ப்புதுறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்...