20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!
Monday, October 18th, 2021இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளைமறுதினம் (20) திறக்கப்படவுள்ளது.
உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான குஷி நகரானது பௌத்த வழிபாட்டு தலங்களைக் கொண்டமைந்துள்ளது. அத்துடன், புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விமான நிலைய திறப்பு விழாவிற்கு பல நாடுகளில் உள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
அந்தவகையில், 100 தேரர்களுடனான விமானமொன்று இலங்கையிலிருந்து குஷி நகர் விமான நிலையத்துக்கான முதலாவது விமானமாகப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை ஏற்றுமதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரி அறவீடு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடி...
பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
|
|