2 மணிமுதல் அமுலானது நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!
Friday, May 13th, 2022பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது!
அஸ்ட்ராசெனெகாவை பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்த முடியும் - உலக சுக...
அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் - வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ச...
|
|