18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரிவிப்பு!
Wednesday, July 14th, 2021
18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்...
மின்சார தூண்களுக்கு அருகில் வீடு கட்டுவதற்கு தடை!
பாடசாலைகளில் ஒரே நேரத்தில் இரு பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு – விரைவில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அம...
|
|
|


