12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் – தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020

நாட்டில் 12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய நிலையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கந்தக்காடு முகாமுக்கு அண்மித்த பகுதியில் 532 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: