11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை – வெளியானது விசேட வர்த்தமானி!
Wednesday, April 14th, 202111 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமைய குறித்த அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.
இதையடுத்து இன்று அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா, தாருல் அதர்-ஜம்உல் அதர் சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம் – ஜமியா ஐஎஸ் அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு, சுப்பர் முஸ்லிம் அமைப்பு என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை.!
நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்பு ; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம...
|
|