கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் குளத்தில் மூழ்கிப் பலி – ஊர்காவற்றுறையில் சம்பவம்!

Friday, June 8th, 2018

குளத்தில் நீராடச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவமொன்று தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஊர்காவற்றுறை மேற்குத்தெருவைச் சேர்ந்த கனடா நாட்டை குடியுரிமையாகக் கொண்ட அன்ரன்  வயது 64 என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது – கனடா நாட்டு குடியுரிமை பெற்ற அன்ரன் ஊர்காவற்றுறை மேற்குத்தெரு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று முன்தினம் நீராடச் சென்றுள்ளார்.

ஒருகால் செயலிழந்த நிலையில் வாழ்ந்துவந்த அன்ரன் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றையதினம் குறித்த குளத்திற்கு சென்ற ஒருவர் சடலம் ஒன்று குளத்தில் மிதந்திருப்பதை அவதானித்து ஊரவர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த சடலம் அன்ரன் என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts: