11 இந்திய மீனவர்கள் கடும் நிபந்தனையுடன் விடுதலை!

Tuesday, January 22nd, 2019

கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களை  கடற்படையினர் கைது செய்திருந்தனர். குறித்த 11 மீனவர்களையும் அன்று மாலை கிளிநொச்சிக்கு அழைத்து வந்த கடற்படையினர் அவர்களை கிளிநொச்சியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த பதினொருபேரும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை 21ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு நேற்று கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, குறித்த பதினொருபேரையும் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்ததுடன், விசைபடகின் உரிமையாளர் வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட இந்தி மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர்.

Related posts:

நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்: சுற்றுலாத்துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு...
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...