10 புகையிரத சேவைகள் ரத்து!
Wednesday, January 24th, 2018
புகையிரத பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாககொழும்பு -கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை முதல் ஆரம்பமாகவிருந்த 10 புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று அதிகாலை பயணத்தை ஆரம்பிக்கவிருந்த யாழ்தேவி புகையிரதம் மற்றும் தலைமன்னார், மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்கள் என்பன ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட சிலர் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் விழிப்புணர்வு!
நிவாரணம் கிடைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் உதய கம்மன்பில ...
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
|
|