10 கோடியினால் நாடாளுமன்ற உறுப்பினர்களத தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!

Sunday, August 28th, 2016

10 கோடி ரூபாவினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது .

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளுக்கான கட்டணம் இதுவரை காலமும் அரசினாலேயே செலுத்தப்பட்டு வந்தது.எனினும் இந்த நடைமுறையில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

தொலைபேசி கட்டணங்களை செலுத்தாது மாதாந்தம் 50000 ரூபா தொலைபேசிக் கட்டண கொடுப்பனவை வழங்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடாமொன்றுக்கு சுமார் பத்து கோடி ரூபா மேலதிக செலவு ஏற்படும் என நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா இரண்டு நிலையான தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இணைப்புகளுக்கான கட்டணமாக மாதாந்தம் சுமார் 35 லட்ச ரூபா செலுத்தப்படுகின்றது.

எனினும் தொலைபேசி கட்டணமாக 50000 ரூபா வழங்குவதனால் இந்தக் கட்டணத்தொகை மேலும் அதிகரிப்பதாகவும் ஆண்டு தோறும் சுமார் பத்து கோடி ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கல்வி அமைச...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு - தேர்தல் ஆணைக...
இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் - தேர்தல்கள் ஆணைக்குழு...