11 இந்திய மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது!

Sunday, November 20th, 2016

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர்  கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே 19ஆம் திகதி மாலை கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு வள்ளங்களும் கைப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளனது..

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரையும் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

boat5

Related posts: