மின்சார துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, December 24th, 2019


மின்சார துறையின் எதிர்கால திட்டத்தை தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு மின்சார துறையில் திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக புத்திஜீவிகள் குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மின் சக்தி துறையின் புத்திஜீவிகள் மற்றும் மத தலைவர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாக சம்பந்தப்பட்ட குழு பெயரிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அமைச்சர் காலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்த குழுவிற்கான பிரதிநிதியைப் பெயரிடுமாறு அமைச்சர் அதிமேற்றானியர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.எதிர்கால மின்சார திட்டம் நடைமுறைப்படுத்தும் பொழுது தாம் ஆக கூடுதலான ஒத்தழைப்பை வழங்குவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Related posts: