பலாலியிலிருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!
Saturday, October 5th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. யாழ். பலாலி ராணுவ விமான நிலையம், அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக எதிர்வரும் 17ம் திகதி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொவிட்!
அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!
கடன் வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தை - நிதி இராஜாங்க அமைச்சர் செ...
|
|
|


