ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Tuesday, September 3rd, 2019


ஜனாதிபதி தேர்தலில் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி நடாத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு கடிதத்தில் கோரியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விடயங்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த கடிதம் இன்றே சில கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடாத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்

Related posts: