சோபா ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம் !
Monday, August 19th, 2019ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, இதனைக் கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தூதுவர் சில வாரங்களுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துபேச விருப்பம் வெளியிட்டிருந்தார், எனினும், அத்தகைய சந்திப்புக்கு சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான காலஅவகாசம் தற்போது முடிந்து விட்டதாகவும் அலெய்னா பி ரெப்லிட்ஸ், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
வெள்ளம் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரின் முன்னாள் உதவி முதல்வர் றீகன்!
பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயி...
|
|