ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் FBI வெளியிட்ட அறிக்கை!
Thursday, September 5th, 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய நபர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளின் தகவல்கள் கொண்ட 5 அறிக்கைகளை அமெரிக்காவின் FBI அலுவலகம் வெளியிட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்திடம் இந்த அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு பிரதான நீதிதவான லங்கா ஜயரத்னவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான FBIயினால் அனுப்பப்பட்ட அந்த அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கோட்டை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Related posts:
உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை - பெப்பரல் !
யுத்த இழப்பீட்டு சட்ட மூலத்திற்கு 2/3 அல்லது சர்வஜன வாக்கெடுப்பு - தேவை என உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் - தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!
|
|