அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்தரதாசனால் திறந்துவைப்பு!

Thursday, January 16th, 2020


புதிதாக அமைக்கப்பட்ட அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்றையதினம் (15) நடைபெற்றது.

குறித்த பகுதி மக்கள் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் தமது பகுதிக்கு நிரந்தர சனசமூக நிலைய கட்டடம் ஒன்று அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைவாக மக்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டடம் அமைக்கப்பட்டு கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: