ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்கல்!

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மரணித்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினை இட்டுள்ளார்.
அவ்வாறு சோகத்தில் உள்ள ஹெய்ட்டி மக்களுடன் இலங்கை ஒன்றாக பயணிக்கும் என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் பலியானதோடு 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக வைத்தியசாலைகள், விருந்தகங்கள் மற்றும் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் ஹெய்ட்டியில் ஒரு மாதத்திற்கு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கை பூரண ஒத்துழைப்பு!
அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் - அமைச்சர் கிரியெல்ல!
நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதியை பெற்றது இலங்கை - சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றி த...
|
|