அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் – அமைச்சர் கிரியெல்ல!

Monday, October 23rd, 2017

நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையின் அடையாளத்துடன் புதிய அரசியல் யாப்பொன்று தயாரிக்கப்படுமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இனவாத மோதல்களின்றி தேசிய ஐக்கியத்துடன் நாடு என்ற ரீதியில் இலங்கை தரமுயர்த்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர். சுதந்திரம் கிடைத்த பின்னர், தயாரிக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புக்களிலும் சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனாலேயே 30 வருட கால யுத்தம் இடம்பெற்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுதந்திரத்தின் பின்னர், உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்களில் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுடன் அனைத்து இனத்தவரதும் உரிமைகளை பாதுகாக்கும் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது. இதனால், இனவாத மோதல் இன்றி அந்த நாடுகள் அபிவிருத்தியடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: