ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு!

Sunday, January 6th, 2019

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நாளை(07) நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

குறித்த குழு, ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related posts:


அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை : கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ...
கிளிநொச்சி​யில் தனியார் காணியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு – பொலிசாரால் விசாரணை முன்ன...