ஶ்ரீலங்கன் விமான சேவை இடைக்கால நிர்வாக சபைக்கு கைமாற்றம்!
Tuesday, January 9th, 2018
ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாகவும் இந்த சபையின் தலைவராக முதலீட்டுசபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகஅறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய பணிப்பாளர் சபையிலுள்ள ஹரேந்திர கே.பால பட்டபெந்தி தவிர்ந்த ஏனைய 6 பேரும் இராஜினாமாகடிதங்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிக...
அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களில் பாரபட்சம் இடம்பெற அனுமதிக்க முடியாது - வடக்கு மாகாண ஆளுநர், ஆசிரியர...
|
|
|


