வெளிவருகின்றது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பட்டியல் !
Thursday, March 15th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் கூறியுள்ளது.
குறித்த வர்த்தமானி மும்மொழிகளிலும் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பணி லியனகே தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரி வர்த்தமானி நேற்று கிடைத்ததாகவும் அதற்கமைய வர்த்தமானி அச்சிடப்படவுள்ளதாகவும் 8356 உறுப்பினர்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை!
இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை!
|
|