இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இராஜதந்திர நடவடிக்கை!

Tuesday, July 4th, 2017

நீடித்துவரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்க்க ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயகுமார், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது இலங்கையில் 42 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேநேரம், 141 மீன்பிடி படகுகளும் தடுப்பில் உள்ளனஇந்தவிடயம் குறித்து நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போதும், கைதுகளும் படகுகளின் கைப்பற்றல்களும் தொடர்கின்றன

எனவே இதனை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் தமது கடிதத்தில் வெளிவிவகார அமைச்சரை கேட்டுள்ளார்

Related posts: