வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்பவர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Wednesday, July 28th, 2021வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றையதினம்முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக பயணம் செய்வோர் இவ்வாறு கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் மாணவ மாணவியருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் தரப்படுத்தப்படுவது அவசியம்
வரும் திங்களன்று முக்கிய அறிவிப்பு : அமைச்சர் பைசர் முஸ்தபா!
75 வீத தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
|
|