வெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்!
Saturday, December 22nd, 2018இலங்கையின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மத்திய மாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 250 பிள்ளைகளுக்கும் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வருடாந்தம் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் யாழில் ஆசிரியர் கைது !
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் எதுவும் நாட்டில் தற்போது இல்லை - வர்த்தகத்துறை அமைச்சர...
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
|
|