வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!

Tuesday, September 20th, 2016

அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்காக பாரியளவில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் ஆண்டு ஒன்றுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்காக 400 கோடி ரூபா செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் அநேக வெளிநாட்டுப் பயணங்களில் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ கடுகளவும் பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.இதனை அமுல்படுத்தும் நோக்கில் விசேட சுற்று நிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளரான சனத் பண்டார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கொழும்பில் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து கடந்த 31ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தினார்கள். இது தொடர்பான விசாரணைகளுக்காகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளர் அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட இவரை கைது செய்தமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தார்கள். மேலும், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட சனத் பண்டார எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 maithripala-sirisena-speaking

Related posts: