வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!
Saturday, June 12th, 2021இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலர் இந்தியாவின் இரண்டு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் நேற்றையதினம் மங்களுரில் வைத்து 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகத்தின் தூத்துக்குடி வரையில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பெங்களூர் வழியாக மங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இலங்கையில் செயற்படுகின்ற இடைத்தரகர்கள் சுமார் 5 இலட்சம் இந்திய ரூபாய் வரையில் கட்டணமாகப் பெற்றிருப்பதாக, மங்களுர் பொலிஸ் ஆணையாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்றும் இவ்வாறு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் தமிழகம் சென்று தங்கி இருந்து 27 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களில் 24 பேர் ஆண்கள் என்பதோடு ஓர் குழந்தையும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|