சிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி!
Saturday, May 25th, 2019வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!
வெளிநாட்டு விமானங்கள் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும் - அனுமதி கொடுத்தது இலங்கை!
நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் - வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ப...
|
|