வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Wednesday, May 12th, 2021வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை இன்று புதன்கிழமைமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்குமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது ரயில்வே தொழிற்சங்கம்?
500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
உள்ளூராட்சி தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் முன்னெடுப்பு - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|