பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, May 28th, 2019நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர்!
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 இலட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு – அரசாங்...
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எமிரேட்ஸுடன் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து !
|
|