வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!
Monday, February 22nd, 2021
கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி அளவு 16.3 சதவீதத்தினால் அதிகரித்து 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாணய மாற்றுவீதத்தின் படி, இந்த தொகை 22.1 சதவீத வளர்ச்சியாக கருதப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கின்ற இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் குறைந்து விட்டாலும் கடந்த ஆண்டில் மாத்திரம் அவர்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக தொகை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எச்சரிக்கை : போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்!
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்ப நாய்கள் - ரயில்வே திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரதது 600 ஐ தாண்டியது கொரோனா தொற்று - 2ஆம் கட்ட தடுப்பூசி சிலதினங்களில் கிடைக்க...
|
|
|


