வெங்காயத்தின் விலை குடாநாட்டில் உச்சம்  : ஒரு அந்தர் ரூபா 10 ஆயிரம் வரை விற்பனை!

Monday, May 15th, 2017

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்படுகின்றது. வடமராட்சி கம்பர்மலை, புலோலி, அல்வாய் கெருடாவில், திக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து விதை வெங்காயத்துக்காக வலிகாமம் பிரதேச விவசாயிகளும், புத்தளம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கவென அந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகளும் போட்டி போட்டு வெங்காயத்தை கொள்வனவு செய்து வருகின்றனர் காலபோக வெங்காயச் செய்கையின் போது கடும் மழை பெய்தது. அதனால் பெரும் எண்ணிக்கையான பரப்பளவில் வெங்காயப் பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்தது. தப்பிப்பிழைத்த வெங்காயம் அறுவடையின் பின்னர் மிக உச்ச விலையை எட்டிப்பிடித்துள்ளது.

இருந்த போதும் மழையால் அழிவுற்ற வெங்காயப் பயிர்களுக்குஎந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts: