வீதி விளக்குகளுக்கு இனிமேல் எல்.ஈ.டி மின் குமிழ்கள்!

Friday, April 12th, 2019

நாடு முழுவதும் தற்போது பயன் படுத்தப்படும் பாரம்பரிய வீதி மின் விளக்குகளுக்குப் பதிலாக வீதி வெளிச்சத்திற்காக செயல் திறன் மிக்க எல்.ஈ.டி மின் குமிழ்களை பொருத்தும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை ஒன்று கெரிய ரெலிகொம் நிறுவனத்திடம் இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தப்பரிந்தரை தொடர்பில் மதிப்பீடு செய்து விடயங்களை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழு ஒன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது.

உத்தேசத்திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் போன்று இந்தக்கட்டமைப்பைப் பயன்படுத்தி கொழும்பு நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கு சீ.சீ.ரி.வி புகைப்படக்கட்டமைப்பை வினைத்திறனுடன்  ஸ்தாபிப்பதற்கு முடிந்தவை பொதுமக்களால் பயன்படுத்தக்கூடிய வைபை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பயன்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீதி வெளிச்சத்திற்காக செயல்திறன் மிக்க எல்.ஈ.டி வீதி மின் குமிழ்களை பொருத்துவதற்கான திட்டத்தை கொரிய ரெலிகொம் நிறுவனத்திற்கு வழங்கி நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: