இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
Tuesday, August 24th, 2021இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!
தயாராகிறது அறிக்கை : செப்டெம்பரில் சமர்ப்பிக்க முடிவு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழப்பு!
|
|