வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை – சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர்!
Friday, March 22nd, 2019உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தற்போதைய கடும்வெப்பநிலை காரணமாக வீதியோரங்களில் செல்வோர் நலன்கருதி பலர் உள்ளூர் தயாரிப்பான சர்பத் மற்றும் ஜுஸ் வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் அவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதை நிறுத்துமாறும் தவறின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.
Related posts:
நிறைவுபெற்ற படையினரின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்...
நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கை - ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
|
|