வீதிக் குறியீடுகள் சீரமைப்பு!
Saturday, March 3rd, 2018
யாழ். குடாநாட்டில் பிரதான வீதிகளில் உள்ள வீதிக்குறியீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் பருத்தித்துறை வீதி, கைதடி, நாவற்குழி போன்ற பிரதான வீதிகளில் உள்ள வீதிக் குறியீடுகள் அழிந்த நிலையில் காணப்பட்டன.
தற்போது இவ் வீதி குறியீடுகள் மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன. அவற்றுள் பிரதான வீதிகளில் சந்தியை அண்டிய பகுதிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கோடுகளும் புதிதாக அமைக்கப்பட்டும் வருவதாக வீதி அதிகார சபை தெரிவித்தது.
குடாநாட்டில் பிரதான வீதிகளில் வரையப்பட்ட இந்த வீதி குறியீடுகள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த வீதி குறியீடுகளை மீளவும் மறுசீரமைப்பதற்கு கொழும்பில் இருந்து இதற்கான மூலப்பொருள்களும் இயந்திரமும் எடுத்து வரப்பட்டன. இவ் வீதிக்குறியீடுகள் தொடர்ந்து மறுசீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Related posts:
சர்வதேசத்தின் உதவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்- ரவிநாத் ஆரியசிங்க!
எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஓரிரு தினங்களுக்குள் தீர்வு - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை!
|
|