விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்!
Thursday, January 10th, 2019நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும்(10) நாளையும்(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது நிலவுகின்ற காலநிலையில் டெங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமையினால் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறினார்.
Related posts:
இளம் தொழிலதிபர் மாயம்: கொல்லப்பட்டாரா என சந்தேகம்?
மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்!
ஐ.நா கூட்டத் தொடரை இலங்கை சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் - - அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!
|
|