விவசாயிகளின் நலன் கருதி உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!
Saturday, February 24th, 2018
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரி 1 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் உள்ளூர் விவசாயிகளின் உருளைக்கிழங்கிற்கு அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு சிறந்த விலை கிடைப்பதற்கு வசதியாகவே இந்த வரிஅதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த வரி அதிகரிப்பு நடைமுறையிலிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை அகாசி வரவேற்றுள்ளார்!
நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் - குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க ...
மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|