இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை அகாசி வரவேற்றுள்ளார்!
Sunday, April 10th, 2016
தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை ஜப்பானின் இலங்கைக்கான சமாதான தூதுவர் யசுசி அகாசி வரவேற்றுள்ளார்.
பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வாவை ஜப்பானில் வைத்து சந்தித்தவேளையில் அகாசி தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டங்களை ஹர்சா டி சில்வா, அகாசியிடம் எடுத்து கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அகாசி, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது பாராட்டை தெரிவித்ததுடன் இந்த முயற்சிகளுக்கு ஜப்பானின் முழுமையான உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் பொலிஸ்மா அதிபர்!
விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!
வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
|
|
|
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் - ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய த...


